ஞாயிறு, 25 நவம்பர், 2012

தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...




தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது. 

டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார். 

இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது.


தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது.

சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார்.

தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனி போல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு.




யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.

உடல் ஊனமுற்றிருந்த மைலோசி என்பவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டு பிடிப்பை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உயர்வடையுங்கள்.

நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும்.

ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர் ஆசீர்வாதம்தான்  


தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம்.

தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை.

வெள்ளி, 16 நவம்பர், 2012

ஆண்கள் மனைவி இருக்க பிற பெண்களை நாடுவதேன்???

மனைவிகள். தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறன் மனை நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் 
ஆனால் ஆண்களின் புத்தியை பெண்கள் அத்தனை சீக்கிரம் புரிந்து கொள்வதில்லை.திருமணமானவர்களுள் ஆண்கள் சிலர் தன் மனைவியைவிட்டு வேறு பெண்களை நாடி செல்லவது சர்வ சாதாரண விடயமாக போய் விட்டது . ஏனெனில் இருவருக்கும் சரியான புரிந்துணர்வு இல்லாததாலும் நல்ல தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்க பிற பெண்களை நாடுகிறார்கள் 
திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் 
ஆனால் அதிகளவானவர்களின் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆயிற்று' முதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்பதற்கான காரணத்தைப் பார்ப்போம்...

திருமணமான புதிதில்இருவருக்கும்அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளிஅதிகமாகிகொண்டசெல்லுகிறது.சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்புஏற்படுகிறது.இந்த வெறுப்பே அவர்களுகிடயிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது 

மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்புகுறையலாம்.மனைவிதனக்குஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள் 

இருவரும் செக்ஸ் பற்றி வெளிபடையாக கதைப்பது இல்லை.ஆண்கள் வெளிபடையாக கதைப்பதற்கு வெட்கப் படுவதில்லை ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவர் மார்களுடன் கதைப்பதற்குவெட்கப்படுகிறார்கள் அல்லதுகதைத்தால் கணவன் என்ன நினைப்பரோ? என்ற எண்ணம் மாறாக அதைப்பற்றி கணவன் கதைத்தால் விலகி செல்கிரார்கள் செக்ஸ் என்பதுஇருவரது உணர்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப் பட்டது இதை பற்றி கதைபதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை

மனைவிமார்களே உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து கதையுங்கள் இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து மேலும் உங்கள் கணவர் உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும் தனியாக மனைவிமட்டுமல்ல ஆண்களும் உங்களது விருப்பங்களை சொல்வது மட்டுமல்ல பெண்களின் கருத்துக்களையும் நீங்கள் ஏற்க வேண்டும்அப்பொழுதான்முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல இவ்வாறு இருபதனால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம்
குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் கணவர்கள், மனைவியரை விட்டு விலக
ஒரு முக்கியக் காரணமாம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில்சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது

கணவர்மார்கள் எப்பொழுதும் தங்களது மனைவிமார் தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும் உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ மனைவி தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள் மாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்கள் தங்களது மனைவி மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டலோ அல்லது அழகாய் இருந்தாலோ அவர்களது மனம் சற்று தடுமாறவே செய்கிறது இது காலப் போக்கில் காதலாக மாறிவிடுகிறது 

குழந்தைகள் பிறந்ததும் மனைவிமார்கள் குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறதுஇதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பித்தால் அதுகணவர்களை 
வெறுப்பை ஆக்கி விடுமாம். இதுவும் கூட மனைவியரிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.

இதற்கான எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்ல வரவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும்அவர்களை மாற்றுகிறது இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால்தான் கணவர்கள், பெரும்பாலும்மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம். உங்க வீட்டுக்காரர் இந்த லிஸ்ட்டில் வருகிறாரா என்று பாருங்கள், வந்தால்
உடனே சரி செய்யப் பாருங்கள்...

வெள்ளி, 2 நவம்பர், 2012

உங்கள் காதலர் ரொம்ப கோபப்படுறாரா? ஈஸியா டீல் பண்ணலாம்...


வாழ்க்கை துணை கோபப்படுபவராக இருந்தால், நிறைய பொறுமை மற்றும சிறு சிறு விளையாட்டுகள் தெரிந்திருக்க வேண்டும். அதிலும் காதலன் அதிகம் கோபப்பட்டால், சில சமயங்களில் அனைத்தும் இருவருக்கும் இடையில் முடிந்துவிட்டது போல் பேசுவார்கள்.

அதிலும் தவறுகளை ஆண்கள் செய்துவிட்டால், அவர்கள் அந்த தவறை ஒப்புக் கொள்வார்கள். ஆனால் அதையே பெண்கள் செய்துவிட்டால், அதைப் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். ஆகவே ஆண்கள் கோபப்படும் போது பெண்கள் சற்று பொறுமையாக இருந்து, அவர்களை ஒரு சிலவற்றால் சமாதானப்படுத்த வேண்டும். அது எப்படியென்று அனுபவசாலிகள் கூறுவதை படித்து பாருங்களேன்...

பெண்களே...

* உங்கள் காதலன் கோபமாக இருக்கும் உங்களுடன் பேச தயாராக இருந்தால், அப்போது அவர்களிடம் அவர் கோபமாக இருப்பதற்கான காரணத்தை பற்றி கேட்டு தெரிந்து கொண்டோ அல்லது நீங்கள் தவறு செய்ததால் கோபப்பட்டால், அதனை பற்றி தெளிவாக அவரிடம் பேசி, அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். இல்லை அவர்கள் பேச தயாராக இல்லையென்றால், அப்போது அவர்களுக்கு மெசேஜ் செய்து சமாதானப்படுத்த வேண்டும்.

* நிறைய ஆண்கள் நீங்கள் தவறு செய்துவிட்டதால் கோபப்பட்டு விட்டு, அந்த கோபத்தை குறைக்க வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் சமாதானப்படுத்தி பேச வரும் போது, அந்த பேச்சை ஏற்க நீங்கள் ஏதேனும் ப்ரூப் காண்பிக்க வேண்டும். இல்லை நீங்கள் தவறு செய்யாமல், காதலன் கோபப்பட்டுவிட்டால், அந்த நேரம் நீங்களும் கோபப்படாமல், அந்த பிரச்சனையை அவர்களுக்கு பேசி புரிய வைக்க வேண்டும். அப்படியிருந்தும் நம்பவில்லையென்றால், நம்பிக்கை இல்லாத உறவு நிலைக்காது. மேலும் அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருந்தால், அவர்கள் கோபமும், நிச்சயம் போய்விடும்.

* சில ஆண்கள் கோபமாக இருக்கும் போது தனியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்போது அவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால், அவர்கள் பிறகு யோசித்து புரிந்து கொண்டு, பின்னர் வந்து பேசுவார்கள். ஆனால் சிலருக்கு அத்கைய இடைவெளி தேவைப்படாது. அபபோது அவர்களிடம் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் பேச வேண்டும். இல்லையென்று விட்டுவிட்டால், அந்த உறவு எதையும் சரியாக தெரியாமல், பின்னர் முறிந்துவிடும்.

* உங்கள் உறவுகளை நீட்டிக்க வேண்டுமென்றால், அனைவரிடமும் பொறுமை இருக்க வேண்டும். சில சமயங்களில் கோபத்தால் பாசமே மறைத்துவிடும். அந்த நேரத்தில் உறவு நீடிக்க வேண்டுமென்றால் பொறுமையாகத் தான், அவர்களை சமாதானப்படுத்தி, குளுமையாக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு செயலை அவர்கள் முன்பு செய்து, சிறு ஜோக்குகள் செய்தும் சமாதானப்படுத்தலாம்.

* நீங்கள் தவறு செய்தால், அப்போது மறக்காமல் உங்கள் காதலனிடம் மன்னிப்பு கேளுங்கள். மன்னிப்பு கேட்பது என்பது பெரிய விஷயம் அல்ல, அவ்வாறு தவறு செய்து விட்டு, ஈகோவால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க மறுத்தால், பின் பிரிவைத் தான் சந்திக்க நேரிடும்.

* நீங்கள் தவறே செய்யாமல் இருக்கட்டும். இருந்தாலும் உங்கள் உறவு நிலைக்க, அந்த பொய்யை உண்மையாக்கி, ஒப்புக் கொள்ளுங்கள். அதுவே தவறு செய்திருந்தால், அந்த தவறை மறுக்காமல் ஒப்புக் கொள்ளுங்கள். இல்லையென்றால், அந்த பொய்யே அவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி, உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

ஆகவே மேற்கூறியவாறெல்லாம் சற்று நடந்து பாருங்கள். உங்கள் காதலன் சமாதானமாகிவிடுவான். மேலும் வேறு எப்படியெல்லாம் சமாதானப்படுத்தலாம் என்று உங்களுக்கு தெரிந்தாலும், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

கனவுகள் பற்றிய சில நிஜமான உண்மைகள்!


ஒவ்வொருவரின் வாழ்க்கை, நினைப்புகளைப் பொறுத்து வரும். மேலும் அத்தகைய கனவுகளை, சில மக்கள் கடவுள் தம்மிடம் ஏதோ ஒரு விஷயத்தை தான் கனவின் மூலம் தனக்கு சொல்கிறார் என்றும், சிலர் அவ்வாறு வரும் கனவுகள் அனைத்தும் நிச்சயம் உண்மையாகும் என்று நம்கிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே இப்போது அந்த கனவுகள் வருவதற்கான உண்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

* இரவில் படுக்கும் போது வரும் கனவுகளில் சிலவற்றை, காலையில் எழுந்திருக்கும் போது நம்மால் ஞாபகப்படுத்திப் பார்ப்பது என்பது கடினமானதாக இருக்கும். அதுவே பயத்தை ஏற்படுத்தும் கனவுகள் என்றால் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். ஆனால் சரியாக தெளிவாக இருக்காது. ஏனெனில் நமது மனம் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் போது, அந்த கனவுகளை சிறிது நேரம் வேண்டுமென்றால் ஞாபகத்தில் வைத்திருக்கும். ஆனால் நீண்ட நேரம் மனதில் இருக்காது.

* யாரைப் பற்றி அதிகம் மனதில் அவர்களும் கனவில் வருவார்கள். ஏனெனில் நமது மனம் முழுவதும் அவர்களையே நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே அவர்களை கனவில் ஏதேனும் ஒரு இடத்தில் சந்தித்து பேசுவது போல் தோன்றும். ஆனால் இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அத்தகைய கனவுகள் நீண்ட நேரம் மனதில் நன்கு பதிந்து இருக்கும். உருவரை நாம் எவ்வளவு நேசிக்கின்றோமோ, அவர்களை எப்படி மறக்க முடியாதோ, அதேப்போல் தான் அவர்கள் மீது வைத்துள்ள பாசத்தால், கனவில் வந்தால் கூட அவர்களை மறக்க முடியவில்லை.

* சில கனவுகள் நடந்து உங்கள் கடந்த வாழ்க்கையை மையமாக கொண்டு வரும். அதாவது, நீங்கள் திடீரென்று உங்கள் சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போது, உங்கள் பழைய வீட்டில் இருக்கும் போது ஏற்பட்ட ஒரு சிலவற்றை கனவில் கூட காண நேரலாம். ஏனெனில் அவை அனைத்தும் உங்கள் மனதில் நன்கு பதிந்துள்ளது என்பதால் தான், அத்தகைய கனவுகள் எல்லாம் வருகின்றன. சிலசமயங்களில் உங்களது எதிர் காலம் கூட கனவில் வரும். உதாரணமாக, நீங்கள் எதாவது ஒரு இடத்தில் யாரையோ சந்திப்பது போல வரும். மேலும் கனவுகள் தூக்கத்தின் போது மட்டும் வருவதில்லை, விழித்திருக்கும் போதும் கூட வரும். ஆனால் அத்தகைய கனவுகள் உங்கள் மனதில் நீங்காது இடம் பெற்றிருந்தால் மட்டுமே வரும்.

* இரவில் உறங்கும் போது, ஒருவருக்கு குறைந்தது 2-4 கனவுகள் வரும் வாய்ப்புள்ளது. ஆனால் அவை அனைத்தையும் ஞாபகப்படுத்த முடியாது. அவை அனைத்தும் மறந்துவிடும். ஒரு சில கனவுகளை மட்டுமே நினைவில் வைத்திருக்க முடியும். ஏனெனில் உங்களுக்கு வரும் கனவுகள் உங்கள் மனதை அல்லது உணர்ச்சியை பாதிக்கும் வகையில் இருந்தால், அந்த கனவுகள் மறக்காமல் இருக்கும்.

ஆகவே கனவுகள் அனைத்தும் ஒவ்வொருவரின் உணர்ச்சி, ஆசை, உள்ளத்தின் பாதிப்பு, பயம் போன்ற பல காரணங்களால் வரும். எதை நம்மால் நிஜத்தில் அடைய முடியவில்லையோ, அவற்றை கனவில் நிச்சயம் அடைந்துவிடுவோம். ஏனெனில் கனவில், நாம் தான் பெரிய ஹீரோ. அங்கு நாம் நினைப்பது தானே நடக்கும். என்ன நண்பர்களே! நீங்கள் உங்கள் கனவில் என்ன ஆசையை நிறைவேறி இருக்கீங்க? அதை எங்களுடன் பகிர்ந்து மகிழுங்களேன்...

அறிவான பெண் வேண்டும் இது ஆண்களின் விருப்பம்!


 சேர்ந்த, 12 ஆயிரம் பேரிடம் கணக்கெடுப்பு நடத்தியது. இதன் மூலம், தற்கால ஆண், பெண் விருப்பங்கள் பற்றி, பல்வேறு, ருசிகர தகவல்கள் வெளிவந்துள்ளன.

அறிவான பெண்கள்

சமீப காலமாக, பெண்களை, அவர்களின் தோற்றத்தின் மூலம், ஆண்கள் மதிப்பிடுவதில்லை. மாறாக, பெண்களின் அறிவுத் திறன், பண்பான குணங்கள் போன்றவையே, ஆண்களை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.

வீட்டு வேலையோ, அலுவலக வேலையோ இரண்டையுமே பேலன்ஸ் செய்வதில் புத்திசாலிப் பெண்களுக்குத்தான் தனி திறமை உண்டு. அழகுப் பதுமைகளாக இருக்கும் பெண்கள் எதற்கெடுத்தாலும் தங்களைத்தான் எதிர்பார்க்கின்றனர். எனவே அழகு என்பதை விட புத்திசாலியான பெண்கள்தான் வாழ்க்கைத்துணையாக வேண்டும் என்று ஆண்கள் கூறியுள்ளனர்.

அழகான ஆண்கள்

அதே சமயத்தில், ஆண்களிடம், வசதியை எதிர்பார்க்கும் பெண்கள், வெகுவாக குறைந்து விட்டனர். நல்ல உடற்கட்டுடன், அழகாக தோற்றம் அளிக்கும், ஆண்களுக்குத்தான் தற்கால பெண்கள், அதிக மதிப்பெண்கள் தந்துள்ளனர். ஆண்களுக்கு, நிகராக, பெண்களின், பொருள் ஈட்டும் திறன் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். ஆண்களின் பணத்தை நம்பி, வாழ வேண்டிய அவசியம் பெண்களுக்கு குறைந்து போய் உள்ளதால், அவர்களது எதிர்காலம் பற்றிய, சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வாரிசுகளுக்கு, தன் கணவனால், வசதியான எதிர்காலத்தை தர முடியுமா என்றும், இக்கால பெண்கள் நினைப்பதில்லை.

பெண்களிடம் ஏற்பட்டு வரும், இந்த மாற்றம் காரணமாக, இனி ஆண்கள், "பணம்... பணம்' என்று ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்க வேண்டி இருக்காது. தம் உடலை அழகாக பேணி வந்தாலே போதும் என்ற நிலை உருவாகி வருவதால், ஆண்கள் இனி, நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இவ்வாறு சர்வே முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆண் மற்றும் பெண்களின் எதிர்பார்ப்புகள் மாறி வருகிறது என்பதையே இந்த கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.

இந்தப் பொண்ணுங்களை புரிஞ்சிக்கவே முடியலை!

இந்தப் பொண்ணுங்களை புரிஞ்சிக்கவே முடியலை. ஒருசமயம் ஆசையா பேசுறாங்க. அப்புறம் முகத்தை தூக்கி வச்சிக்கிறாங்க என்று புலம்பும் ஆண்கள் அதிகம். ஆழ்கடல் ரகசியத்தைக்கூட அறிந்துவிடலாம் ஆனால் மங்கையரின் மன ஆழத்தை அறிவது இயலாத காரியம் என்று தத்துவம் பேசும் ஆண்கள் ஒரு ரகம். காதலியின் மனதை அறிந்து கொண்டு அவர்களை கவர நினைக்கிறீர்களா? இதோ உங்களுக்காகவே இந்த டிப்ஸ்.

காதலில் வெற்றிபெறவும், மகிழ்ச்சிக்கான திறவு கோலாகவும் திகழ்வது நம்பிக்கை. உங்க காதலி மேல் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். அப்புறம் உங்க காதலியைப் பத்தி முழுவதுமா தெரிந்து கொள்வது அவசியம். அதனால் வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் உங்க காதலி விரும்பக்கூடிய விஷயங்கள் என்னென்ன? என்று முதல்ல கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க…

பெண்கள் பலவிதம்

ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள் “நெய்ல் பாலிஷ்”-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.

எப்போதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பெண்கள். அதனால எந்த நேரத்திலும் இன்சல்ட் பண்ற மாதிரி பேசாம நல்லா டைம் எடுத்து உங்க காதலியை முழுமையாக தெரிஞ்சு வையுங்க. உங்க காதல் பொன்னானதாக இருக்கணும்னா.. அவங்க சொல்றதை பொறுமையா காதில வாங்கி அவங்களுக்கு பிடிச்சது விரும்புறது எல்லாத்தையும் புரிஞ்சு கொண்டு அதை செயல்படுத்துறதுக்கு ஆரம்பியுங்க.

ரொமான்ஸ் அவசியம்

அதே சமயத்துல நீங்க ரெண்டு பேரும் எங்காவது “டேட்டிங்” போகும் போது அவங்க உங்க கூட இருக்கும் போது நீங்க எப்படி உணர்வீங்க அப்படின்னு அவங்க கிட்ட சொல்லுங்க.ஏன்னா பெண்கள் எல்லாரும் வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது. அதனால இன்றைக்கு வரைக்கும் அவங்க உங்கள் கிட்ட இருந்தே பல புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வர முயற்சிப்பாங்க.

இன்னொரு விஷயம்… தன் காதலன் மட்டும் தன்கிட்ட ரொமான்டிக்கா நடந்துக்கல என்றால், அவங்க ரொம்பவே “டல்” ஆய்டுவாங்களாம். அதனால உங்களுடைய அன்பான பேச்சாலும் அரவணைப்பாலும் உங்க காதலை வெளிப்படுத்துங்க.

தலைமைப் பண்பு

என்ன செஞ்சாலும் சில பெண்களை கவரவே முடியாதுங்க. அப்படிப்பட்ட விதிவிலக்கான பெண்களை அறிவுப்பூர்வமாக பேசி அசத்தலாம். தன்னம்பிக்கை நிறைந்த, தலைமைப் பண்பு கொண்ட ஆண்களை சிலர் விரும்புவாங்க. அப்படிப்பட்ட பெண்களை அவங்களுக்கு ஏற்றார்போல பேசி கவரலாம். ஒருசிலர் சமூக ஆர்வலரா இருப்பாங்க, சமுதாய சேவை செய்வது அவங்களுக்குப் பிடிக்கும். அந்த மாதிரி பெண்களை அவங்களுக்கு பிடித்தமாதிரி நடந்து கொண்டு அசத்தலாம்.

உங்க காதலி எப்படிப்பட்டவங்க அதை தெரிந்து கொண்டு அசத்துங்கள். அவங்க குட்புக்கில் இடம் பெற்றுவிட்டால் உங்கள் காதல் வெற்றிதான்.