செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.


1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள்

2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் .

4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.

5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.

6)சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7)நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்.

8)உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.

9)உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10)நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்...

புதன், 12 பிப்ரவரி, 2014

காதலர் தினம்


 

காதலனே ..............! 
உன் நினைவுத் தடங்களை 
கண்ணீரோடு தினமும் - என் 
தலையணையில் தேடிப் பார்கிறேன் 
இனிக்கும் உன் குரலை நினைத்தப் பின் தான் 
இமைகள் நிம்மதியாக ஒன்றுடன் 
ஓன்று அணைத்துக் கொண்டு 
தூக்கதை தருகிறது - இருந்தாலும் 
கனவில் நீ வந்து கண்டபடி 
கண்ணா மூச்சியாடுகிறாய் ..............! 

காதலனே ......................! 
ஒவ்வொரு காலைப் பொழுதில் 
கண்விழிக்கும் போது - என்னுடன் 
நீ உறங்குவதாய் நினைத்து -கட்டிலில் 
உன்னைத் தேடி ஏமாற்றம் அடைகிறேன் ...! 

என் வாசமுள்ள நேசனே........!என் இடுப்பை 
கிள்ளி சீண்டிப் பார்க்கும் ராட்ஷசனே 
நீ கிள்ளும் போது கையை தட்டி விட்டது 
மறுபடியும் நீ சீண்டி விளையாட மாட்டயா -என்ற 
ஏக்க பொய் கோபத்தினால் தான் என்பதை 
உணர்ந்துக் கொள்ளடா .......! 

என் இதயக் காதல் துணையே ......! 
என்னை உன் மார்பில் தாங்கி 
முத்த மழை பொழியும்போது -அந்த 
இன்பசுகத்தில் செத்து விட துடித்தேனடா ...! 
உன் ஒற்றை விரலால் பம்பரமாய் சுற்றி 
என் இளமையை கொதிக்கவிட்டு 
அழகு பார்த்தவனே ......! 


நீ கோபப் படும்போது சிவந்து போகும் 
உன் காது மடல்களை தின்று விட 
துடிக்கிறேனடா- இதழை வெளுப்பாக்கி 
கண்களை சிவக்கவைத்தவனே.....! 

சித்திரமாய் உன்னை என் நினைவில் 
செதுக்கி - அதில் என்னை நான் இழைத்துக் 
கொண்டது உனக்கு தெரியுமாடா ......!-காதலால் 
என்னை துண்டு துண்டாய் உடைத்தவனே ...! 
உன்னை கட்டிக் கொள்ள என்னை ஒட்டிவிடு 

இதே காதலர் தினத்தில் ஒருநாள் என்னை 
பிரிந்து போனவனே..! - வருடங்கள் போய் 
பலவானது - இருந்தாலும் உனக்காய் வாசமுடன் 
காதலோடு காத்திருக்கிறேன்...! இன்றாவது 
வந்து விடு .....! - என்னை ஒட்டிவிடு ........!

காதலர் தினம் - சிறப்பு பார்வை



நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் தற்போது பரவி வரும் காதல் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை சீரழித்து வருகிறது. தமிழகத்தில் வாலிப பருவத்தில் வரும் காதலில் பெரும்பாலானவை தோல்வியையே சந்தித்து வருவதற்கு அது உண்மையான காதலே இல்லை என்பதே முக்கிய காரணம் ஆகும்.

டீன் ஏஜ் பருவம் என்பது தீயில் நடப்பது போன்றதாகும். வாலிப பருவத்தில் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சில தடுமாற்றங்கள் நிகழ்வதே இங்கு காதலாக கருதப்படுகிறது. அவ்வாறு ஏற்படும் தடுமாற்றத்தை காதல் என்று எடுத்துக்கொள்வது தவறு.  ஆனால் அத்தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவது நெருப்பாற்றை நீந்தி கடப்பதற்கு சமம். அந்த அளவுக்கு சிந்திக்கும் திறன் அப்பருவத்தில் ஏற்படாது என்பதும் முற்றிலும் உண்மையே. அத்தடுமாற்றத்தில் இருந்து விடுபட்டு வாழ்க்கையின் உண்மையை புரிந்து கொண்டால் வாலிப பருவத்தில் வருவது காதலே அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வார்கள்.

டீன் ஏஜ்

உடலில் ஏற்படும்
உணர்ச்சி மாற்றம்
அது
காதல் அல்ல
காமம்...

முதலில் எவரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு மனிதன் வாழும் சூழ்நிலை உருவாகவேண்டும். அதற்கு அவன் சுயமாக நிற்கவேண்டும். அவ்வாறு சுயமாக நிற்க அவன் நன்றாக படிக்கவேண்டும். அதன் பின் நல்ல வேளையில் அமரவேண்டும். அதற்கு பின் தான் காதலை பற்றி ஒருவன் சிந்திக்க வேண்டும். தனக்கு பிடித்த பெண்ணை பற்றி  சிந்தித்து, உணர்ந்து அப்பெண் தன் வாழ்க்கையில் இணைந்தால் தன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்ற மன உறுதிக்கு ஒருவன் வரவேண்டும்.

பின் தனக்கு உயிர் கொடுத்தவர்களும், சமூகத்தில் உயர்வான நிலைக்கு தன்னை உயர்த்தியவர்களுமான பெற்றோரிடம் தனது காதலை பற்றி கூறி அவர்களது சம்மதத்தை பெற வேண்டும். தனது மகனை மிகப்பெரிய அளவுக்கு சமுதாயத்தில் உயர்த்திய பெற்றோர் நிச்சயமாக அவனின் காதலையும் ஏற்றுக்கொள்வார்கள் என்பது நிஜம். அப்படி அமையும் காதல் திருமணம் தான் நிஜ வாழ்க்கையில் வெற்றி பெறும் காதலாக அமையும். இது காதலின் முதல் வகை.

இனி இரண்டாவது வகையை பார்ப்போம். தனது மகனுக்கு நல்ல கல்வியை கொடுத்து அவன் நல்ல வேலையில் அமர உதவிய பெற்றொர் அவனது மண வாழ்க்கையும் நல்ல விதமாகவே அமையவேண்டும் என்றே பெரிதும் விரும்புவர். அவ்வாறு தனது நலனை பற்றி சிந்திக்கும் பெற்றோரின் எண்ணத்தை புரிந்து கொண்டு அவர்கள் தேர்ந்தெடுக்கும் பெண்ணை திருமணம் செய்துகொண்டு தனக்கு வரும் மனைவியை காதலித்து, பெற்றோருக்கும் மனைவிக்கும் ஏற்றவாறு குடும்ப வாழ்க்கையை நடத்த முன்வரவேண்டும். இந்த திருமண வாழ்க்கையில் மூன்று முடிச்சுகளுக்கு ஏற்றவாறு முதல் மூன்று வருடங்கள் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் அக்னிப்பரீட்சையாக அமையும்.

இந்த மூன்று வருடங்களில் பெற்றோர் மற்றும் மனைவி ஆகிய இரு தரப்பினரையும் மனம் கோணாதவாறு பார்த்துக்கொண்டு அவன் அப்பரீட்சையை சாமர்த்தியமாக கடந்துவிட்டால் அதுவும் வெற்றி பெறும் காதலாக அமையும். அவனுக்கு அமையும் மனைவியும் விட்டுக்கொடுக்கும் தன்மை உள்ளவளாக இருந்து விட்டால் அக்காதல் இரட்டிப்பு வெற்றியை அடையும்.

ஆனால் நடைமுறை வாழ்க்கையில் கணக்கெடுத்து பார்த்தால் இங்கு பெரிதும் சரிவே காணப்படுகிறது. கணவரின் குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாக நடந்துகொள்ளவேண்டும், தன்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு நற்பெயரை வாங்கித்தரவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புவதாகவே தெரியவில்லை.

அதிலும் வேலைக்கு போகும் பெண்ணாக இருந்துவிட்டால், தலைகுனிந்து மரியாதையோடு நடக்க வேண்டிய அவள் தலைக்கணத்துடனும், தான் என்ற அகம்பாவத்துடனும் நடப்பதன் காரணமாகவே தமிழகத்தில் தற்போது அதிக அளவில் விவகாரத்து ஏற்படுகிறது. அதிலும் பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவரை அவர்கள் பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிக்குடித்தனம் செல்லவேண்டும் என்ற எண்ணத்திலேயே செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு இயற்கைக்கு முரணாக நடந்து கொள்ளும் மருமகளின் எண்ணத்தை புரிந்து கொண்டு தனது மகனை மட்டும் மருமகள் நன்றாக பார்த்துக்கொண்டால் போதும் என்ற எண்ணத்தில் பெற்றோர்களும் தங்களது மகனை விட்டு ஒதுங்கிவிடுவதும் இன்றைய சமூகத்தில் பரவலாக காணப்படுகிறது.

திருமணம்

இல்லற வாழ்வின்
தொடக்கம்
இடியாப்ப சிக்கல்களின்
துவக்கம்
இறைவனின் பரிட்சைக்கு
முன்னோட்டம்

சரி. மூன்றாவது வகையை பார்ப்போமா?

தன்னை திருமணம் செய்து கொண்ட கணவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டும். தனது மாமனார், மாமியாரின் விருப்பத்திற்கேற்ப நடந்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்து குடும்பத்தை தாங்கிப்பிடிக்கும் மனைவியின் தியாகத்தை புரிந்து கொண்டு அவளுக்கு உண்மையான அன்பை கொடுக்கவேண்டியது ஒவ்வொரு கணவனின் முக்கிய கடமையாகும்.

பெற்றோரோடு வசிக்கும் போது அந்த அன்பை மனைவிக்கு கொடுப்பதற்கு தவறினாலும் பெற்றோரின் காலத்திற்கு பின்னாவது தன்னையே நம்பி வந்து தனக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் துன்பங்களையும், இன்பங்களையும் தன்னுள்ளே சுமந்து வாழ்ந்து வரும் மனைவிக்கு உரிய மரியாதையையும், நல்ல அன்பையும் ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக தரவேண்டும்.

தனக்கும், தனது பெற்றோருக்கும், தங்களின் குழந்தைகளுக்காகவும் இல்லறத்தை நல்லறமாக நடத்திவரும் மனைவியை தன் இரு கண்களாகவே ஒவ்வொரு மனிதனும் கருதவேண்டும். தற்போதைய நடைமுறை வாழ்வில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருதரப்பும் சரியாக புரிந்து செயல்படுகின்றனர் என்பது பெருமளவு சரி தான். ஆக மேற்கூறிய வகையில் அமையும் இல்லற வாழ்க்கை காதலின் மும்மடங்கு வெற்றியை பறைசாற்றுவதாக அமையும்.

இங்கே தனக்காக தியாக உள்ளத்தோடு வாழும் மனைவியை பற்றி புரிந்துகொள்ளாமல் மனைவியை கொடுமைப்படுத்தி மிருகம் போல் நடந்து கொள்ளும் ஆண்களும் சமூகத்தில் உள்ளனர். அவ்வாறு அமையும் நரக வாழ்க்கையையும் சகித்துக்கொள்ளும் பத்தினித் தெய்வங்கள் நமது கிராமங்களிலும் நகரத்திலும் ஏராளமானோர் உள்ளனர் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

பெண்

கணவனை
புரிந்துகொண்டாள்
கடமையை
தெரிந்துகொண்டாள்
இல்லறத்தை
இனிமையாக்கினாள்
இவளே குடும்பத்தின்
தலைமகள் ஆனாள்...

இந்த உண்மைகளை புரிந்து கொண்டு எப்படிப்பட்ட காதல் வாழ்க்கைக்கு நல்லது என்பதை புரிந்துகொண்டு ஆண்களும், பெண்களும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்

திங்கள், 10 பிப்ரவரி, 2014

கல்யாணமானவரகள் கல்யாணமாகாதவர்கள் யாவரும் வாசித்து பயனுறுங்கள்

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? 

1.எந்த வேளையிலும் உண்மை பேச வேண்டும்...
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.