புதன், 12 பிப்ரவரி, 2014

காதலர் தினம்


 

காதலனே ..............! 
உன் நினைவுத் தடங்களை 
கண்ணீரோடு தினமும் - என் 
தலையணையில் தேடிப் பார்கிறேன் 
இனிக்கும் உன் குரலை நினைத்தப் பின் தான் 
இமைகள் நிம்மதியாக ஒன்றுடன் 
ஓன்று அணைத்துக் கொண்டு 
தூக்கதை தருகிறது - இருந்தாலும் 
கனவில் நீ வந்து கண்டபடி 
கண்ணா மூச்சியாடுகிறாய் ..............! 

காதலனே ......................! 
ஒவ்வொரு காலைப் பொழுதில் 
கண்விழிக்கும் போது - என்னுடன் 
நீ உறங்குவதாய் நினைத்து -கட்டிலில் 
உன்னைத் தேடி ஏமாற்றம் அடைகிறேன் ...! 

என் வாசமுள்ள நேசனே........!என் இடுப்பை 
கிள்ளி சீண்டிப் பார்க்கும் ராட்ஷசனே 
நீ கிள்ளும் போது கையை தட்டி விட்டது 
மறுபடியும் நீ சீண்டி விளையாட மாட்டயா -என்ற 
ஏக்க பொய் கோபத்தினால் தான் என்பதை 
உணர்ந்துக் கொள்ளடா .......! 

என் இதயக் காதல் துணையே ......! 
என்னை உன் மார்பில் தாங்கி 
முத்த மழை பொழியும்போது -அந்த 
இன்பசுகத்தில் செத்து விட துடித்தேனடா ...! 
உன் ஒற்றை விரலால் பம்பரமாய் சுற்றி 
என் இளமையை கொதிக்கவிட்டு 
அழகு பார்த்தவனே ......! 


நீ கோபப் படும்போது சிவந்து போகும் 
உன் காது மடல்களை தின்று விட 
துடிக்கிறேனடா- இதழை வெளுப்பாக்கி 
கண்களை சிவக்கவைத்தவனே.....! 

சித்திரமாய் உன்னை என் நினைவில் 
செதுக்கி - அதில் என்னை நான் இழைத்துக் 
கொண்டது உனக்கு தெரியுமாடா ......!-காதலால் 
என்னை துண்டு துண்டாய் உடைத்தவனே ...! 
உன்னை கட்டிக் கொள்ள என்னை ஒட்டிவிடு 

இதே காதலர் தினத்தில் ஒருநாள் என்னை 
பிரிந்து போனவனே..! - வருடங்கள் போய் 
பலவானது - இருந்தாலும் உனக்காய் வாசமுடன் 
காதலோடு காத்திருக்கிறேன்...! இன்றாவது 
வந்து விடு .....! - என்னை ஒட்டிவிடு ........!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக