வெள்ளி, 10 ஜனவரி, 2014

உறவு அழியாமல் நிலைத்திட காதல் என்பது அவசியம்......

பொறாமை என்ற குணம் ஒரு உறவையே நாசமாக்கிவிடும். பொதுவாக ஒரு உறவில் பெண்கள் தான் அதிக பொறாமை குணத்துடன் பாதுகாப்பின்மையோடு இருப்பார்கள். தன் காதலனோடு பல பெண்கள் கடலை போடும் போது அந்த காதலிக்கு பொறாமை குணம் உண்டாவது இயல்பு தானே? அந்த சூழ்நிலையில் நாம் உணர்ச்சிவசப்பட்டு நடக்கும் போது தான் பிரச்சனைகள் உருவாகிறது. பல பெண்கள் உங்கள் காதலனிடம் கடலை போடும் போதும் பதிலுக்கு அவரும் வழிந்தால் மட்டுமே நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்ட வேண்டும்.


உங்கள் காதலன் பார்க்கும் அனைத்து பெண்களுடனும் நட்புடன் பழகும் போது நீங்கள் கூடுதல் கவனத்துடன் நடக்க வேண்டும். ஆனால் சரியான காரணமே இல்லாமல் பொறாமை பட்டால் உங்கள் உறவு புளித்து போய் மூச்சு முட்டி தத்தளிக்கும். எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி அல்லது காதலாக இருந்தாலும் சரி, அவநம்பிக்கை என்பது மட்டும் இருக்கவே கூடாது. உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே காதலும் நம்பிக்கையும் இருப்பதால் மட்டுமே உங்கள் துணை உங்களுடன் இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.
நீங்கள் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியோடு இருந்த காலங்கள் எல்லாம் மறைந்து போவதற்கு ஆத்திரமும் பொறாமையும் காரணமாக அமைந்து விடும். உங்கள் உறவில் பொறாமை ஏற்படுவதற்கான காரணங்களை தவிர்க்க பல வழிகள் இருக்கிறது. அதற்கான சில டிப்ஸ்களை பற்றி இப்போது பார்க்கலாமா... நம்பிக்கை எந்த ஒரு உறவுக்குமே அடிப்படையாக விளங்குவது நம்பிக்கையே. உங்கள் துணையை எப்போதுமே உங்கள் அடி மனதில் இருந்து நம்புங்கள். அதற்காக அவரை குருட்டுத் தனமாக நம்ப வேண்டும் என்பதில்லை. உங்கள் நம்பிக்கையை முதலில் உங்கள் துணை சம்பாதிக்க வேண்டும். 
 
நம்பிக்கை என்பதை முதலில் நாம் சம்பாதிக்க வேண்டும். ஒரு முறை நம்பிக்கையை இழந்து விட்டால் அதனை மீண்டும் பெறுவது சுலபமல்ல. அதனால் பொறாமை குணத்தை தவிர்க்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் துணையின் மீது நம்பிக்கை வையுங்கள். அதே போல் அவரின் நம்பிக்கையையும் சம்பாதித்துக் கொள்ளுங்கள். 
 
உரையாடுங்கள் ஒரு உறவுக்கு பாலமாக இருப்பது உரையாடல்களே. ஒரு காதலன் காதலியிடையே சரிவர பேச்சுவார்த்தைகள் இல்லையென்றால் அவர்கள் காதல் உறவில் ஏதோ பிரச்சனை உள்ளதென்று அர்த்தமாகும். இரு உள்ளங்கள் ஒன்று சேர்வதே வாழ்நாள் முழுவதும் அவர்கள் சந்தோஷமாக சேர்ந்து வாழ்வதற்காகவே. வெறுமனே உடலுறவு மட்டும் உங்களை வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வைத்திருக்காது. உரையாடல்கள் என்பதும் கூட உங்கள் உறவில் பொறாமையை தவிர்க்க உதவும்.
 
விருப்பு வெறுப்புக்கு முக்கியத்துவம் எந்த ஒரு உறவும் வெற்றிகரமாக அமைய, அந்த ஜோடி தங்கள் தனித்துவத்தை இழக்காமல் இருக்க வேண்டும். அவரவரின் சொந்த விருப்பு வெறுப்புகளில் தலையிடக் கூடாது. இதில் பிரச்சனை ஏற்படும் போது தான் அந்த உறவில் பாதுகாப்பின்மை மற்றும் பொறாமை முளைக்க துவங்கும். உங்கள் துணையின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதில் அளவுக்கு அதிகமாக தலையிடக் கூடாது. அவர்களை அழுத்தி பிடிக்காமல் நிம்மதியாக மூச்சு விட விடுங்கள். நீங்கள் அவரை அதிகமாக அழுத்த அழுத்த அதற்கேற்ப உங்கள் காதலும் அழியத் தொடங்கும். 
 
புரிதல் ஒரு உறவில் பொறாமையை வளர விடாமல் தடுக்க ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் இருக்க வேண்டும். உங்கள் உறவு ஆரோக்கியத்துடன் நீடிக்க புரிதல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். உங்கள் துணையின் தேவைகளை நன்றாக புரிந்து வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கைக்கும் புரிதலுக்கும் வித்தியாசம் உள்ளது. அவைகள் இரண்டும் வேறு வேறு தான் என்றாலும் ஒரு உறவு நீண்ட நாட்கள் நிலைத்திட அவை இரண்டுமே முக்கியம் தான். 
 
காதலை வாழ விடுங்கள் என்ன ஆனாலும் சரி, உங்கள் இதயத்தில் இருக்கும் காதல் மட்டும் தேய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த காதல் உணர்வு உங்களை விட்டு நீங்கி விட்டால் உங்கள் துணையை விட்டு எப்படி பிரியலாம் என்ற எண்ணம் தோன்ற துவங்கி விடும். ஒரு உறவு அழியாமல் நிலைத்திட காதல் என்பது அவசியம். காதல் மட்டும் இருந்தால் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சரி அதனை தைரியமாக சமாளிக்கலாம். அதே போல் பொறாமை மற்றும் பாதுகாப்பின்மையையும் உங்கள் காதலினால் சுலபமாக தவிர்த்து விடலாம்.
 

வேலை பார்க்கும் தம்பதியருக்கு இடையில் உறவை மேம்படுத்த சில வழிகள்!!!

நிறைய மக்கள் எவ்வாறு பழகுவது என்பதை கற்றுக்கொள்ளுவதில்லை. இந்த திறமை இல்லையென்றால், ஒரு மனிதன் நெருங்கிய உறவினர்களுக்கிடையே உறவுகளை தொடரும் தன்மையை இழக்கிறான். தன்னுடைய உணர்வுகளை வெளிபடுத்தும் திறமையும், பிறரை கவனிக்கும் திறமையும் இல்லாதவர்கள், நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாது.   உங்கள் உரையாடும் திறனை வளர்ப்பதன் மூலம், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே ஆன அன்பு அதிகரித்து உங்கள் உறவை பாதுகாப்பாகவும் வைக்க முடியும். 
 
இன்றைய கால கட்டத்தில், மரியாதைக்குரிய உறவுள்ள தம்பதியர்கள், தங்களுடைய வேலையின் காரணமாக தங்களுக்குள் நல்ல உறவு மற்றும் அன்பை பகிர்ந்து கொள்ள நேரம் இல்லாமல் உள்ளனர். வெளிப்படையான, உண்மையான மற்றும் நேர்மறையான உரையாடும் திறன் மட்டுமே ஒரு நல்ல மற்றும் சந்தோஷமான உறவு முறையை ஏற்படுத்துவதற்கு சிறந்த அடித்தளமாக அமையும்.
 
தொடர்பு இன்மையால் நிறைய விவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. தம்பதியருக்குள் ஏற்படும் வாதங்கள், சண்டைகள் மற்றும் முன்னும் பின்னுமாக பேசுவது போன்றவற்றை அவர்களுடைய திருப்தியான உறவு முறையால் மட்டுமே தவிர்க்க முடியும். யாராவது ஒருவர் விட்டுக்கொடுப்பது, பிரச்சனையை நல்ல வழியில் மாற்றி செலுத்த உதவுகிறது. 
 
தனிப்பட்ட வேலையால், தம்பதியர் சேர்ந்து சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் இருப்பதால், உங்கள் உறவு மற்றும் தொடர்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. நீங்கள் வெளியிலேயே அதிக நேரம் செலவிடுதலால்,உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு, உங்கள் உறவு முறை பாதிக்கப்படுகிறது. இதனால் யாராவது ஒருவர் முதிர்ச்சியுடன் கவனமாக செயல்பட்டு இந்த மாதிரியான கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது நேரம் ஒதுக்குவதன் மூலமும், வெளியில் அழைத்து செல்வதன் மூலமும் உங்களுக்குள் இருக்கும் இடைவெளியை நல்ல வழியில் சரி செய்ய வேண்டும். 
 
கவனித்தல் சிறந்த உறவுமுறை நல்ல உரையாடல்களை பொறுத்தே அமையும். அதற்கு கவனித்தல் மிகவும் முக்கியமாக விளங்குகிறது. இருவரும் சேர்ந்து பேசுவது என்பது ஒரே நேரத்தில் நடக்காத ஒன்று, ஒருவர் பேசும் போது மற்றவர் கவனிக்க வேண்டும். அதே போன்று ஒரே ஆளே தொடர்ந்து பேசுவதும் தப்பான உறவு முறைக்கு வழிவகுக்கிறது. நீங்கள் உங்கள் துணையின் பேச்சிற்கும் காது கொடுத்து கேட்டு அவர்களை நீங்கள் எந்த அளவிற்கு கவனிக்கிறீர்கள் என்பதை காட்ட வேண்டும். 
 
வெளிப்படையாயிருத்தல் நம்முடைய உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது நம் அனைவருக்கும் இயற்கையாக வரும் சுபாவம் அல்ல. எனினும் இந்த பழக்கம்,எளிமையாகவும் இயற்கையாகவும் உங்களுக்கு வருவதற்கு தேவையான முயற்சிகளை முதலில் மேற்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் கவனிப்பதை விட பேசுவதில் கவனத்தை செலுத்த வேண்டும். 
 
நீங்கள் உங்கள் துணையிடம் ஒவ்வொரு நாளும் உங்கள் நாள் கழிந்த விதத்தையும், நீங்கள் வேலை செய்த இடத்தில் நடந்த சம்பவங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நேர்மை நீங்கள் உங்கள் துணையிடம், உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில் நேர்மை இல்லா விடில், உங்கள் உறவிற்கு எந்த மதிப்பும் இல்லை. எனவே உண்மை எவ்வளவு கசப்பாக இருப்பினும், கடினமான விஷயமாக இருப்பினும் உண்மையை கூறுவதும், நேர்மையாய் இருத்தலும் மிகவும் முக்கியமானது. 
 
உறவில் ரகசியமும், பொய்யும் இல்லாமலிருந்தால், எளிமையாகவும், சிக்கல் இல்லாமலும், குழப்பம் இல்லாமலும் உறவு விளங்கும். மேலும் கடைசியாக, தேவையற்ற ஆச்சரியங்கள் மற்றும் விவரங்கள் போன்றவை கவனிக்கப்படாமல் இருந்தாலும் அவை ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். கவனம் சில நேரங்களில் சாதாரண உரையாடல்கள் தான், பயங்கர மோதல்களுக்கும், விவாதங்களுக்கும் வழிவகுத்து விடுகின்றன. 
 
எனவே ஒவ்வொருவரும் அவர்களுடைய துணையிடம் பேசும் போதும், அவர்கள் கூறுவதை கேட்கும் போதும் கவனத்துடன் செயல் பட வேண்டும். உங்களுடைய துணை பேசும் போது, அவர்கள் பேசுவது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும். மரியாதை மற்றும் ஒத்துழைப்பு மரியாதைக் குறைவால் தான், பெரும்பாலான திருமணங்களில் சண்டைகளும் மோதல்களும் ஏற்படுகின்றன. கட்டாயப்படுத்துதல் மற்றும் தொழிலில் தாழ்வு போன்றவைகளும் சில நேரங்களில் காரணங்களாகி விடுகின்றன. எனவே மரியாதை கொடுத்தலும், வாழ்வின் எந்த நிலையிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்தலும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமான வழியாகும்.

திருமணம் என்பது சொத்துக்காகவா அல்லது காதலுக்காகவா...?

திருமணம் என்பது இரண்டு உள்ளங்களுக்கு இடையே ஏற்படும் சமயப்பற்றான உறவாகும். திருமணம் என்பது பொதுவாக பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது காதல் திருமணமாக இருக்கலாம். தங்களை நேசிப்பதற்கும், காதலிப்பதற்கும், கவனிப்பதற்கும் வாழ்கை முழுவதும் உடனிருப்பதற்கும் ஒருவர் வேண்டும் என்பதால் தான் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொள்கின்றனர்.


ஆனால் சில பேர் அதனை லாபம் ஈட்டு தரும் ஒரு வியாபாரமாக பார்க்கின்றனர். அதனால் அவர்கள் அதிக சொத்து சுகம் உடைய ஆண்களையோ பெண்களையோ தான் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்கின்றனர். கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் கூட அது தான் உண்மை. பணம் கறப்பதற்காகவே சில பேர் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வியாபார நோக்கோடு நடக்கும் திருமணங்களும் வெற்றிகரமாகவே முடிகிறது.

அதனால் தான் என்னவோ பணத்திற்காக திருமணமா அல்லது காதலுக்காக திருமணமா என்ற கேள்வி எப்போதும் உலா வந்து கொண்டே இருக்கிறது. காதல் என்பது வாழ்க்கையில் ரொம்பவும் முக்கியம் தான். ஆனால் அதற்காக பணத்தை ஒதுக்கிட முடியுமா? அதிகரித்து கொண்டே இருக்கும் இன்றைய பொருளாதாரத்தோடு போராடா ஒருவர் நடைமுறைக்கு ஒத்து வரும் படியும் யோசிக்க வேண்டும் அல்லவா? நம் வாழ்க்கையை நடத்திட வெறும் காதல் மட்டும் போதாது அல்லவா? நம்மிடம் சுத்தமாக பணம் இல்லாமல் நம்மை சுற்றில் ஒரே பிரச்சனைகளாக நிலவும் போது காதல் வந்து உதவி புரிந்திட முடியுமா என்ன? காதலுக்காக திருமணம் செய்வதை விட பணத்திற்காக செய்யப்படும் திருமணங்கள் சிறந்ததாக விளங்குவதற்கு பல காரணங்களும் உதாரணங்களும் உள்ளது.

பணத்துடைய மதிப்பையும் முக்கியத்துவத்தையும் இப்போதெல்லாம் மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். பணம் அல்லது காதலுக்காக திருமணம் செய்வதற்கு சில உறவுமுறை சார்ந்த டிப்ஸ் இருக்கிறது. அவைகளை கொஞ்சம் பார்க்கலாமா? பாதுகாப்பு: பணத்திற்காக திருமணமோ அல்லது காதலுக்காக திருமணமோ, இரண்டிலுமே வருங்காலத்திற்கான பாதுகாப்பு தேவை. இங்கே பாதுகாப்பு என்று நாம் சொல்வதை நிதி நிலைப்புத்தன்மையை. அதனால் அதிக சொத்துக்கள் வைத்து நல்ல நிதி நிலைப்புத்தன்மையுடன் விளங்குபவர்களை பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம். காதல் என்பது முக்கியம் தான், ஆனால் பாதுகாப்பு என்பதும் முக்கியம் தானே. உங்கள் வருங்காலம் நல்ல படியாக அமைய ஒரு உறுதி வேண்டாமா? அதற்காக தங்கத்தை கொள்ளையடிப்பவர்களை போல் நடக்காதீர்கள். 
 
உங்கள் வருங்காலம் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் படி பார்த்துக் கொண்டு திருமணம் செய்யுங்கள். வசதி வாய்ப்புகள்: வசதி வாய்ப்புகள் என்று இங்கே நாங்கள் சொல்வது ஆடம்பர வாழ்க்கையை பற்றி அல்ல. திருமணத்திற்கு பின் அடிப்படை தேவைகளும் வசதிகளும் பூர்த்தியாக வேண்டாமா? வெறும் காதலுக்காக திருமணம் செய்தால் இந்த வசதிகள் எல்லாம் உங்கள் கிட்டி விடும் என்று சொல்ல முடியாதல்லவா? நீங்கள் யாரையாவது காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் கூட அவர்களுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்த இந்த அடிப்படை வசதிகள் வேண்டும் தானே. மன நிறைவு: ஒரு உறவு நிலைத்திட காதல் என்பது அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு குடும்பம் நிலைத்திட பணமும் சொத்து சுகமும் காதலை போலவே தேவைப்படுகிறது. 
 
 
சொத்து சுகமோ அல்லது காதலோ, இரண்டையுமே குறைவாக எடை போட முடியாது. ஒரு குடும்பத்திற்கு மனதுக்கு நிறைவான வாழ்க்கை வேண்டுமானால் அதற்கு பணம் தேவை. ஒரு பெண்ணுக்கு வேண்டியது எல்லாம் அவளின் குடும்ப பந்தம் நீண்ட ஆயுளோடு விளங்கி அவளின் தேவைகள் பூர்த்தியாவதே. இதுவே ஒரு ஆண் என்றால், அவன் குடும்பத்தை அன்பாக கவனித்துக் கொள்ளவும் அவனை திருப்தியாக வைத்துக் கொள்ளும் ஒரு மனைவியை எதிர்பார்க்கின்றான். 
 
பணம் அல்லது காதலை அடிப்படையாக கொண்டதோ; எதுவாக இருந்தாலும் அந்த திருமண பந்தத்தில் மன நிறைவு கிடைக்க வேண்டும். காதலை விட பணத்திற்காக திருமணம் செய்தவர்களுக்கு தான் அதிக மன நிறைவு கிடைக்கிறதாம். குடும்ப பந்தம்: பழங்காலத்தில் இருந்து நம் சமுதாயத்தில் பெரியோர்களால் நடத்தப்படும் திருமணங்கள் சொத்து சுகத்தை அடிப்படையாக வைத்தே செய்யப்படுகின்றன. தங்களுக்கு நிகரான சாதி, சமுதாயம், ஆஸ்தி மற்றும் அந்தஸ்தை கொண்ட குடும்பத்தில் தான் சம்பந்தம் செய்து கொள்கின்றனர். 
 
பணத்திற்காக திருமணம் என்பது ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டியது அல்ல; நம் பெற்றோரும் அவர்களின் பெற்றோரும் அந்த அடிப்படையில் தானே திருமணம் செய்து கொண்டிருப்பார்கள். திருமணத்திற்கு பின் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்துள்ளது. தங்கள் சாதி சனத்திலிருந்து தங்களுக்கு நிகரான அந்தஸ்தை உடைய சம்பந்தத்தை பெறவே பணத்தை அடிப்படையாக கொண்ட திருமணங்கள் நடை பெறுகின்றன. 
 
 
சமுதாய கோட்பாடுகளை சில நேரம் காதல் திருமணங்கள் உடைத்தெறியும். நீடித்து நிலைத்திட: காதலுக்காக செய்யப்படும் திருமணங்களை விட பணத்திற்காக செய்யப்படும் திருமணம் தான் அதிக நாட்களுக்கு நீடித்து நிற்கும்; கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் அது தான் உண்மை. அதற்கு காரணம் உங்களின் காதலும் ஈர்ப்பும் காலப்போக்கில் மறைந்து விடும். தினசரி பிரச்சனைகள், குடும்ப தேவைகள் மற்றும் வேலை பளு ஆகியவைகள் உங்கள் காதலை தேயச் செய்யும். இதனால் அடிக்கடி சண்டையும் சச்சரவும் உண்டாகும். பணத்திற்காக செய்யப்படும் திருமணத்திலும் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் அழுவதென்று வந்து விட்ட போது ஒரு  காரில் உட்கார்ந்து அழலாமே; எதற்கு சைக்கிளில் உட்கார்ந்து அழ வேண்டும்?

காதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி?

ஒவ்வொரு பெண்ணுக்கும் தன காதலன் அல்லது கணவனை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அப்படி தெரிந்து கொள்ளும் போது தான் அந்த உறவில் அவர்களின் நிலை என்னவென்று அவர்களுக்கு புரியும். அல்லது அந்த உறவில் உள்ள அர்த்தத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் கணவன் அல்லது காதலனை சுலபமாக புரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கலாம். 

ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. அவரை பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள நீங்கள் முற்படும் போது அதனை நீங்கள் மென்மையாக கையாள வேண்டும். பொதுவாக ஆண்கள் தங்களை பற்றிய விஷயங்களை அவ்வளவு சுலபத்தில் திறப்பதில்லை. அவர்களுக்கென ஒரு வேலி போட்டு கொண்டு வாழ்வார்கள். அதனால் அவர்களை பற்றி தெரிந்து கொள்வதில் அதிக சிரத்தை எடுக்க வேண்டி வரும். 

அவரை பற்றி நன்றாக புரிந்து கொள்ள அவரை பற்றிய தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பொறுமையை முக்கிய ஆயுதமாக பயன்படுத்த வேண்டும். உங்கள் உறவில் அவரை பற்றி தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளது. அவரை பற்றி நன்றாக தெரிந்து கொள்வதால் சில எதிர்மறையான ஆச்சரியங்கள் வெளிப்படுவதை நீங்கள் தவிர்க்கலாம். ஒருவரையொருவர் நன்றாக தெரிந்து கொண்டு புரிந்து வைத்திருந்தால் இருவரின் உறவும் திடமாக இருக்கும். 
 
உங்கள் துணியை புரிந்து கொள்வது என்பது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு செயலாகும். அவருடன் உறவில் இருக்கும் காலம் வரை அது நீடித்துக் கொண்டே இருக்கும். அவருடன் வாழத் தொடங்கி பல வருடம் ஆகியிருந்தாலும் கூட அவரை பற்றி தெரியாத விஷயங்கள் சில இருக்கத் தான் செய்யும். அவர் ரகசியமாக மூடநம்பிக்கையை கடைப்பிடிப்பவராக இருக்கலாம், தனிமையை விரும்பலாம், சோதனையான கடந்த காலத்தை கொண்டிருக்கலாம், செல்லப்பிராணிகள் என்றால் எரிச்சல் அடையலாம் என உதாரணகளை அடுக்கி கொண்டே போகலாம். பல நேரங்களில் கொடுத்தல் வாங்கல் அடிப்படையிலேயே உங்கள் உறவு நகரும். அவரிடம் இருந்து சில விஷயங்களை தெரிந்து கொள்ள உங்கள் வாழ்வில் உள்ள ரகசியங்களை நீங்கள் அவரிடம் சொல்ல வேண்டியிருக்கும். 

மெதுவாக ஆரம்பியுங்கள் 
 
உங்கள் உறவு ஆரம்பித்த கால கட்டத்தில் நம்பிக்கையை வலுப்படுத்தி ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த காலத்தில் அவரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதை பொறுத்து தான் அவர் உங்கள் கனவு கண்ணனா அல்லது உங்களை பிடிக்க போகும் சனியா என்பதை தீர்மானிக்க முடியும். இருப்பினும் அவரை பற்றி அறிந்து கொள்வதை நீங்கள் துரிதப்படுத்தினால் அதுவே கூட உங்கள் உறவு முடிவதற்கு ஒரு காரணமாக அமையலாம். 
 
கேள்விகள் 
உங்கள் காதலன் உங்களிடம் அந்தரங்கமாக பேச ஆரம்பித்து விட்டால் அவரை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆரம்பியுங்கள். அவர் கூறும் பதிலில் இருந்து அடுத்த கேள்வியை கேட்டு அவரை பற்றி தெரிந்து கொள்ள முற்படுங்கள். அவருக்கு பிடித்த விளையாட்டு குழுவை கேட்டால் அதோடு நிற்காமல் அதில் அவருக்கு பிடித்த விளையாட்டு வீரர் யார் என்பதை கேளுங்கள். அதற்கு வரும் பதிலில் இருந்து அப்படியே அடுத்த கேள்வியை ஆரம்பியுங்கள். இவ்வழியை பின்பற்றி அவரை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளலாம். அவரும் அவருடைய விருப்பு வெறுப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வார். 
 
கொடுத்து வாங்கல் 
 
உங்களுக்கு அவரை பற்றி எந்தளவுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமோ அதே அளவு அவருக்கும் உங்களை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும் அல்லவா? அவரை கேள்விக்கனலால் துளைத்து எடுப்பதற்கு பதிலாக அவர் கூறுவதற்கு பதிலளிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் பேசும் போது மற்றவர் கவனித்தால் மட்டுமே ஒரு நல்ல உரையாடல் நடைபெறும். 

அவரின் நண்பர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 
 
அவரின் நண்பர்களுக்கு நீங்களும் நெருங்கிய நண்பராக இருந்தாலும் சரி அல்லது பெயரளவுக்கு அவர்களை தெரியும் என்றாலும் சரி, அவர்களை சந்தித்து அவர்களை பற்றி தெரிந்து கொண்டால், உங்கள் காதலன் அல்லது கணவனோடு உங்கள் நெருக்கத்தை அதிகரிக்க இது உதவும். தன் காதலனை பற்றி காதலிக்கு தெரியாத பல விஷயங்கள் அவருடைய நண்பர்களுக்கு தெரியக் கூடும். அதனால் அவர்களிடம் இருந்து கூட பல விஷயங்கள் உங்களுக்கு தெரிய வரும். 
 
அவரின் வேலையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 
 
அவரின் வேலையை பற்றியும் வேலையில் அவரின் மனக்கிளர்ச்சி பற்றியும் தெரிந்து கொண்டால் அவரை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ளலாம். அவரின் வேலையை பற்றி பேசத் தொடங்கலாம், அன்றைய பொழுதில் அவரின் வேலை எப்படி இருந்தது போன்றவைகளை பற்றியெல்லாம் பேசலாம். அலுவலக பார்ட்டிகள் அல்லது அலுவலக சந்திப்புகளில் அவருடன் வேலை செய்பவர்களிடமும் பேசும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 
 
நன்றாக காது கொடுத்து கேட்பவராக இருக்க வேண்டும் 
 

அவரை பற்றி தெரிந்து கொள்ள இதை விட எளிய வழி எதுவுமே இல்லை. அவர் பேசும் போதோ அல்லது தன்னுடைய கனவு மற்றும் லட்சியங்களை சொல்லும் போதோ பெயரளவுக்கு கேட்காமால் ஆர்வத்துடன் கவனியுங்கள். அவர் ஏற்கனவே சொன்னதை மீண்டும் கூறினால் அதனை குறைகூறாமல் ஆர்வத்துடன் கேளுங்கள்.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

உங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமா?: 12 ராசிக்கும் ஜோதிட பார்வை!

உங்கள் ராசிக்கு காதல் உறவுகள் எவ் வகையில் அமையும் என்பதை பார்ப்போம்


மேஷம் 
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம் 
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம் 
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம் 
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம் 
சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.

கன்னி 
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம் 
எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் 
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு 
இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.

மகரம் 
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம் 
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம் 
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.