திங்கள், 23 மே, 2011

உங்கள் காதலை அளவிட


காதல் புனிதமானது. புதிரானதும் கூட. ஆனால் என்றும் புதிதானது. காதலிப்பவர்களுக்கு இடையில் உள்ள உறவு எப்படி இருக்கிறது என்பதை அளவிட இங்கு ஒரு சுயபரிசோதனை கேள்வி-பதில் தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் உங்கள் காதலின் ஆழத்தை அளவிட்டுக் கொள்ளலாம். புதிதாக காதலிக்கத் தொடங்கினால் உங்கள் துணையை எப்படி கவர்ந்திழுக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

1. உங்கள் காதலரை சந்தித்தால் எதைப்பற்றிப் பேசிக் கொண்டு இருப்பீர்கள்?

அ. பணச் செலவு, சமுதாய நிலவரம், உயர்ந்த வாழ்க்கை கனவுகள் பற்றி...

ஆ. காதலரின் திறமைகள், வளர்ச்சி பற்றி..

இ. நீ நல்ல பையன்/ பொண்ணு போன்ற புகழ்ச்சி

2. உங்கள் காதலியை எங்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்கள்?

அ. புதிதாக தொடங்கப்பட்ட ரெஸ்டாரண்ட், கிளப்

ஆ. பாதுகாப்பான மற்றும் பேசிக் கொண்டிருக்க வசதியான சிற்றுண்டி சாலை, பார்க்

இ. குடும்ப உணவகத்துக்கு நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் அழைத்துச் செல்வேன்.

3. பெற்றோருடன் சென்றிருக்கும்போது தற்செயலாக உங்கள் காதலரை சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?


அ. ஜாடை செய்வேன், ஆனால் யாரென்று காட்டிக்கொள்ள மாட்டேன்.

ஆ. நான் உன்னை இங்கு சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று வியப்பு காட்டுவேன்.

இ. ஏற்கனவே தெரிந்தவர்போல அவரிடமும் பேசுவேன்.

4. அவர் உங்களுக்குத்தான் என்று நிச்சயமானால் உங்கள் முதல் திட்டம் என்ன?


அ. தொட்டுத் தொட்டுப் பேசுவேன், உறவு வைத்துக் கொள்ள சம்மதமா என்று கேட்பேன்.

ஆ. கைகளை பின்னிக்கொண்டு ஷாப்பிங் அழைத்துச் செல்வேன். நண்பர்கள் முன் அழைத்துச் சென்று உரிமை கொண்டாடுவேன்.

இ. என்னைப் பற்றி அவள் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைச் சொல்வேன். சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டி இருப்பதை விளக்குவேன்.

5. உங்கள் பிறந்த நாள் விழாவுக்கு உறவினர்களை அழைக்கிறீர்கள், அப்போது...


அ. எல்லோரையும் அழைப்பதுபோல் காதலரையும் அழைப்பேன். ஆனால் கண்டுகொள்ள மாட்டேன்..

ஆ. நிச்சயம் அவருடன் தனியாக இருக்கும்படி திட்டமிடுவேன்.

இ. உறவினர்களுடன் இருந்தாலும் அவ்வப்போது அவளை தனியே சந்தித்து பேசுவேன்.

6. காதலி எந்த விதத்தில் உங்களுக்குப் பொருத்தமானவர் என்று நினைக்கிறீர்கள்?


அ. பார்வைக்கு அழகானவர், படுக்கைக்கு பொருத்தமானவர்.

ஆ. எங்களுக்கு இடையில் உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. என்னை புரிந்து கொண்டு செயல்படுவார்.

இ. எங்கள் குடும்பத்துக்கு பொருத்தமானவர்.

7. காதலரை நினைவூட்டும் மிகப்பெரிய விஷயம் எது?

அ. மற்ற காதலர்களின் நெருக்கங்களை காணும்போது.

ஆ. அவர் என்னுடன் பேசிய பேச்சுக்கள், பகிர்ந்து கொண்ட எஸ்.எம்.எஸ்.களை பார்க்கும் போது...

இ. விழாக்களில் எடுத்த புகைப்படங்ககளை பார்க்கும் போது...

* உங்கள் பதில்களில் மிகுதியாக `அ' விடை இருக்குமானால்...


உங்கள் காதலில் மோகம் மிகுந்திருக்கிறது. ஈர்ப்பால் மட்டும் உங்கள் காதல் அரும்பி இருக்கிறது. உடல் சார்ந்த தேவைக்காக நேசிக்கும் உங்கள் மனநிலை மாற வேண்டும்.

உடல் சார்ந்த உறவு மட்டும் காதலுமல்ல, வாழ்க்கையும் அல்ல. உண்மையான காதல் என்பது எல்லாவற்றுக்கும் முன்னுரிமை கொடுக்கும்.

விட்டுக்கொடுக்கும். எதிர்பார்ப்பும், நம்பிக்கை குறைவும் இருக்காது. உங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் நல்ல காதலும், சிறந்த உறவுகளும் அமையும்.

* "ஆ'' விடை அதிகமாக வருபவர்களுக்கு..
.

மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு உங்கள் காதல் ஆச்சரியமானது. அன்பு வழியில் அனுபவப்பூர்வமாக பயணிக்கிறீர்கள்.

சரியான புரிதலுடன் கூடிய விட்டுக்கொடுத்தலும், எல்லையில்லா நேசமும் உங்கள் காதலை மேலும் பெருகச் செய்யும். பாராட்டுக்கள்.

* விடைகளில் `இ' மிகுந்திருக்கும் உங்களுக்கு...


ஒரு ஈர்ப்புடன் பழகும் முதல் நிலையில் இருக்கிறீர்கள். காதலில் இது இரண்டும் கெட்டான் நிலை. அவர் மீது விருப்பம் இருந்தாலும் அது காதலா என்பது சந்தேகமே. பல விஷயங்களை எதிர்பார்க்கிறீர்கள், பழகுகிறீர்கள்.

உங்கள் எதிர்பார்ப்பு ஈடானால் மட்டும் நீங்கள் இன்னும் நெருக்கம் காட்டுவீர்கள். நேசம் என்பது எதிர்பார்ப்புடன் வருவதல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது.
thanks Net





புதன், 18 மே, 2011

நீங்கள் எந்த வகை

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வதுண்டு.

காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும்.

சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா... ஒன்றானது இல்லையா?!

நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான செய்தி.

காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம் 'பிளேபாய்’தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட காதல் செய்துவிடலாம். 'ப்ளடானிக் லவ்' (Platonic love) என்று சொல்வார்கள்.

ஆனால், ரொமான்டிக் விஷயம் அப்படி அல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை, இலக்கியம், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும்.

'முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்சினையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். மனம் திறந்து வெளிப்படையாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்

சந்தோசமாக வாழும் கணவன் - மனைவி உறவு மேம்பட, மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண்டும். கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.

மனிதர்களில் மூன்று வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

1-முதல் வகை, ‘I am ok, your are also ok’.. அதாவது, 'நானும் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.
2-இரண்டாவது வகை ‘I am not ok, but you are ok’.. அதாவது, 'நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.
3-மூன்றாவது வகை, ‘I am ok, but you are not ok’. இவர்கள், 'நான் சரியாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை' என்று நினைப்பவர்கள்.

இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்சினைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள்... முதல் வகைதான். 'நானும் சரி, நீயும் சரி. பேசித் தீர்ப்போம் வா' என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்.

இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும்.

வெள்ளி, 13 மே, 2011

ஆண்களுக்கு சில டிப்ஸ்! பெண்கள் எதை எதை விரும்புவார்கள்.

* காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?’ என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.
* விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே…’ என்று வற்புறுத்தக்கூடாது.

* எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண் களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசர மாக அதைச் செய்வதில் அவர் களுக்கு உடன்பாடு இல்லை.

* திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரண மாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக் குமே உண்டு.

* எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந் தள்ளக் கூடாது.

* ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.

* படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.

* அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ… பில் அதிகமாகி விடும்’ என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும்.

* வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்ட மாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளிர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.

* கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.

திங்கள், 29 நவம்பர், 2010

உங்கள் அன்புக்குரியவள் உங்களை சுற்றி வர

கடவுள் எல்லாவற்றையும் கொடுத்தாலும் அவர் கொடுத்த ஆறாம் அறிவை ஒழுங்காக பயன்படுத்தாமையால் வருகிற வினைதான் சிக்கல்கள். ஒரு குடும்பத்தில் சிக்கல்கள் என்றால் அடிப்படையான காரணத்தை பார்த்தால் பிரதானமாக இருப்பது திருப்தியற்ற தாம்பத்திய உறவு தான். எனவே சுமூகமான செக்ஸ் நிச்சயம் ஒரு சந்தோசமான வாழ்க்கைக்கு உதவும். அதற்கு சிறந்த விழிப்புணர்வு அவசியம். அது தொடர்பான சில டிப்ஸ்.


1 )சுயநலகாரனாய் இருக்க வேண்டாம்
இந்த விடயத்தில் பெருன்பான்மையான சமயத்தில் ஆண்களின் ஆதிக்கமே கொடிகட்டி பறக்கிறது.அதாவது ஆண்கள் தான் எஜமானர்களாகவும் பெண்கள் அடிமைகளாகவும் உள்ளனர்.இது தவறு.ஆண் பெண் இருவரின் ஆதிக்கமும் சம அளவில் இருக்க வேண்டும். அதாவது ஆண் தனது இஷ்டத்துக்கு ஆட முடியாது.ஒவ்வொரு செயற்பாடும் இருவரின் மனம் ஒன்றியே நடக்க வேண்டும்.உதாரணமாக உடலுறவின் புதிய பரிமாணங் களை படைக்கிறேன் என்று கிளம்புபவர்கள் பலர் அதனால் தம் ஜோடி படும் துன்பங்களை அறிவதில்லை.எனவே ஆண் தனக்கு தோன்றும் விருப்பங்களை போல் தனது துணைக்கும் சில விருப்பங்கள் இருக்கும் என புரிந்து நிறைவேற்ற பழக வேண்டும்.

2 )புரிந்து கொள்ளுங்கள்
பெண்கள் மனதை அறிவது கடினம என்பார்கள். அதற்காக சும்மா விட முடியாது.குறிப்பாக இந்த விடயத்தில் அவர்களின் மனது உங்கள் சட்டை பையில் என்றால் நீங்கள் தான அவளது ஒரே ஒரு ஹீரோ. இதற்காக நீங்கள் இருவரும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.எந்த வெட்கமோ தயக்கமோ இருக்க கூடாது. நண்பர்களுடன் கதைப்பதை போல் இயல்பாக இருவரும் கதைப்பதின் மூலம் இருவரின் விருப்பு வெறுப்புக்கள் புரியப் பட்டு எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக இருக்கும். நீங்கள் உங்கள் உங்கள் விருப்பங்களை திணிப்பதற்கு பதிலாக அவளின் விருப்பத்தை அறியுங்கள். அதே நேரம் உங்கள் விருப்பங்களின் தொடர்பான நிலைப்பாட்டையும் அறிய முயலுங்கள்.

3 )பச்சையாக கதைக்கலாம்
இது சற்று கடினமானது ஒன்று தான். நிங்கள் உங்கள் துணையுடன் மேற் கூறியவாறு இந்த விடயத்தில் ஒரு நல்ல புரிந்த்துனர்வை பேணுமிடத்து இது சுலபம். ஏனெனில் இப்படியான பேச்சுக்கள் இருவருக்கு நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும். மேலும் இறுக்கமான மன நிலையில் இருந்தது ஒரு பார்க்கின்ற மனநிலைக்கு எடுத்து செல்லும். இது மேலும் உங்கள் துணையின் மனதை அறியவும் காட்டும் reactions இல் இருந்து அடுத்த கட்டத்துக்கு செல்வது தொடர்பாக நீங்கள் சிந்திக் கலாம். “I’d like to (blank) your beautiful (blank) while softly squeezing your (blank),”என்று சொலவதில் தவறில்லை. தமிழில் எழுதினால் மோசமாகி விடும் என்பதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.

4 )நல்ல சூழலை ஏற்படுத்துங்கள்
நிங்கள் தான் இதற்க்கு பொறுப்பு. எடுத்தோமா கவுத்தொமா என்று இல்லாமல் ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக சத்தம் இருக்க கூடாது.டிவி,ரேடியோ போன்றவற்றை நிறுத்தி விட வேண்டும். உங்களை ஒருவரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எவன் கதவை தட்டுவானோ, அல்லது நாங்கள் அபபடியிரிக்கிறோம் என்பதை கண்டு பிடித்து விடு வார்களோ என்று பயந்து கொண்டிருக்க வேண்டியது தான. இது தான் சில பெண்கள் தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் பிரதான காரணி. ஏனெனில் பெண்கள் மற்றவவர்கள் நம்மை கவனிப்பார்களோ என்று பயப்படுகின்றனர். அவர்கள் சுதந்திரமான சூழலையே விரும்புகின்றனர்.

5 )அவளை கடவுளின் வரமாக மதியுங்கள்
சிலர் பெண்களை எதோ செக்ஸ் இயந்திரம் போலவும் பெண்கள் இந்த உலகத்தில் இருப்பதே செக்ஸ் இக்கும் பிள்ளை பெறவும் தான என்று நினைக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் நிச்சயமாக சந்தோசமாக இருக்க முடியாது. முதலில் உங்கள் அனுபுக்குரியவளை கடவுள் உங்களுக்கு தந்த வரமாகவும் அவளூடாக தான் அவர் உங்களின் வாழ்கையை வசந்தமாக வைத்திருக்க போகிறார் என்பதை நீங்கள் புரிந்தது கொண்டாலே நீங்கள் அவளை கொண்டாட அவள் உங்களை கொண்டாடுவாள். எனவே அவளுடலை பாவித்து விட்டு எரியும் plastic tea cup போல நினைக்காமல் அதை உங்கள் மனதின் வடிவமாக பாருங்கள். பிறகு உங்கள் வாழ்வில் வசந்தம் மட்டும் தான்

உங்கள் அன்புக்குரியவள் உங்களை சுற்றி வர

கடவுள் எல்லாவற்றையும் கொடுத்தாலும் அவர் கொடுத்த ஆறாம் அறிவை ஒழுங்காக பயன்படுத்தாமையால் வருகிற வினைதான் சிக்கல்கள். ஒரு குடும்பத்தில் சிக்கல்கள் என்றால் அடிப்படையான காரணத்தை பார்த்தால் பிரதானமாக இருப்பது திருப்தியற்ற தாம்பத்திய உறவு தான். எனவே சுமூகமான செக்ஸ் நிச்சயம் ஒரு சந்தோசமான வாழ்க்கைக்கு உதவும். அதற்கு சிறந்த விழிப்புணர்வு அவசியம். அது தொடர்பான சில டிப்ஸ்.


1 )சுயநலகாரனாய் இருக்க வேண்டாம்
இந்த விடயத்தில் பெருன்பான்மையான சமயத்தில் ஆண்களின் ஆதிக்கமே கொடிகட்டி பறக்கிறது.அதாவது ஆண்கள் தான் எஜமானர்களாகவும் பெண்கள் அடிமைகளாகவும் உள்ளனர்.இது தவறு.ஆண் பெண் இருவரின் ஆதிக்கமும் சம அளவில் இருக்க வேண்டும். அதாவது ஆண் தனது இஷ்டத்துக்கு ஆட முடியாது.ஒவ்வொரு செயற்பாடும் இருவரின் மனம் ஒன்றியே நடக்க வேண்டும்.உதாரணமாக உடலுறவின் புதிய பரிமாணங் களை படைக்கிறேன் என்று கிளம்புபவர்கள் பலர் அதனால் தம் ஜோடி படும் துன்பங்களை அறிவதில்லை.எனவே ஆண் தனக்கு தோன்றும் விருப்பங்களை போல் தனது துணைக்கும் சில விருப்பங்கள் இருக்கும் என புரிந்து நிறைவேற்ற பழக வேண்டும்.

2 )புரிந்து கொள்ளுங்கள்
பெண்கள் மனதை அறிவது கடினம என்பார்கள். அதற்காக சும்மா விட முடியாது.குறிப்பாக இந்த விடயத்தில் அவர்களின் மனது உங்கள் சட்டை பையில் என்றால் நீங்கள் தான அவளது ஒரே ஒரு ஹீரோ. இதற்காக நீங்கள் இருவரும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.எந்த வெட்கமோ தயக்கமோ இருக்க கூடாது. நண்பர்களுடன் கதைப்பதை போல் இயல்பாக இருவரும் கதைப்பதின் மூலம் இருவரின் விருப்பு வெறுப்புக்கள் புரியப் பட்டு எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக இருக்கும். நீங்கள் உங்கள் உங்கள் விருப்பங்களை திணிப்பதற்கு பதிலாக அவளின் விருப்பத்தை அறியுங்கள். அதே நேரம் உங்கள் விருப்பங்களின் தொடர்பான நிலைப்பாட்டையும் அறிய முயலுங்கள்.

3 )பச்சையாக கதைக்கலாம்
இது சற்று கடினமானது ஒன்று தான். நிங்கள் உங்கள் துணையுடன் மேற் கூறியவாறு இந்த விடயத்தில் ஒரு நல்ல புரிந்த்துனர்வை பேணுமிடத்து இது சுலபம். ஏனெனில் இப்படியான பேச்சுக்கள் இருவருக்கு நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும். மேலும் இறுக்கமான மன நிலையில் இருந்தது ஒரு பார்க்கின்ற மனநிலைக்கு எடுத்து செல்லும். இது மேலும் உங்கள் துணையின் மனதை அறியவும் காட்டும் reactions இல் இருந்து அடுத்த கட்டத்துக்கு செல்வது தொடர்பாக நீங்கள் சிந்திக் கலாம். “I’d like to (blank) your beautiful (blank) while softly squeezing your (blank),”என்று சொலவதில் தவறில்லை. தமிழில் எழுதினால் மோசமாகி விடும் என்பதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.

4 )நல்ல சூழலை ஏற்படுத்துங்கள்
நிங்கள் தான் இதற்க்கு பொறுப்பு. எடுத்தோமா கவுத்தொமா என்று இல்லாமல் ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக சத்தம் இருக்க கூடாது.டிவி,ரேடியோ போன்றவற்றை நிறுத்தி விட வேண்டும். உங்களை ஒருவரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எவன் கதவை தட்டுவானோ, அல்லது நாங்கள் அபபடியிரிக்கிறோம் என்பதை கண்டு பிடித்து விடு வார்களோ என்று பயந்து கொண்டிருக்க வேண்டியது தான. இது தான் சில பெண்கள் தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் பிரதான காரணி. ஏனெனில் பெண்கள் மற்றவவர்கள் நம்மை கவனிப்பார்களோ என்று பயப்படுகின்றனர். அவர்கள் சுதந்திரமான சூழலையே விரும்புகின்றனர்.

5 )அவளை கடவுளின் வரமாக மதியுங்கள்
சிலர் பெண்களை எதோ செக்ஸ் இயந்திரம் போலவும் பெண்கள் இந்த உலகத்தில் இருப்பதே செக்ஸ் இக்கும் பிள்ளை பெறவும் தான என்று நினைக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் நிச்சயமாக சந்தோசமாக இருக்க முடியாது. முதலில் உங்கள் அனுபுக்குரியவளை கடவுள் உங்களுக்கு தந்த வரமாகவும் அவளூடாக தான் அவர் உங்களின் வாழ்கையை வசந்தமாக வைத்திருக்க போகிறார் என்பதை நீங்கள் புரிந்தது கொண்டாலே நீங்கள் அவளை கொண்டாட அவள் உங்களை கொண்டாடுவாள். எனவே அவளுடலை பாவித்து விட்டு எரியும் plastic tea cup போல நினைக்காமல் அதை உங்கள் மனதின் வடிவமாக பாருங்கள். பிறகு உங்கள் வாழ்வில் வசந்தம் மட்டும் தான்

வியாழன், 18 நவம்பர், 2010

ரோஜாவும் அர்த்தமும்


இன்றைய உலகில் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்குமிடையில் அன்பை பரிமாறிக் கொள்ள முதலிடம் வகிப்பது ரோஜாப்பூவே,

இவ் ரோஜாப்பூக்கள் பற்பல நிறங்களில் காணப்படுவது அதிசயமே தான்.

ஒவ்வொரு நிற ரோஜாப்பூவும் என்ன அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றது என்பதை சற்று விரிவாக நோக்கினால்......,

*சிவப்பு ரோஜாக்கள் அன்பையும், காதலையும் வெளிப்படுத்தும். மரியாதை மற்றும் பேரார்வத்தை வெளிப்படுத்தவும் இந்த ரோஜாக்கள் உதவும். ஆழ்மனதில் இருக்கும் அழகையும் பிரகாசிக்கச் செய்யும் வல்லமை சிவப்பு ரோஜாக்களுக்கு உண்டு.

*இளஞ்சிவப்பு ரோஜாவை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வழங்கலாம். பாராட்டுவதற்கும், வாழ்த்து கூறவும், நட்பு பாராட்டுவதற்கும் ஏற்றது `பிங்க்` ரோஜா.

* மெலிதான இளம்சிவப்பு ரோஜாக்கள் அழகை வெளிப்படுத்தக் கூடியது. கருணை, மகிழ்ச்சி, ஆளுமைத்திறனை வெளிப்படுத்த சிறந்தது இந்த ரோஜாக்கள்.

* அடர்ந்த `பிங்க்' நிற ரோஜா நன்றி தெரிவிக்க கொடுக்கப்பட வேண்டியது.

* இளம்நீல நிற ரோஜா, முதல் பார்வையில் இதயத்தை கொள்ளை கொண்டவருக்கு கொடுக்கப்பட்டால் அவரது அன்பை மேலும் பெருக்கித்தரும்.

* வெள்ளை ரோஜா உயிரில் கலந்த தூய காதலை வெளிப்படுத்த வழங்கப்படுவதாகும். திருமணம் நிச்சயமான சமயத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கலாம். பயபக்தி, பணிவைக் காட்டவும் வெள்ளை ரோஜா பொருத்தமானது. குற்றமற்றவன் என்பதைச் சொல்லவும் வெள்ளை ரோஜா ஏற்றது.

* நட்பு, மகிழ்ச்சி, பெருமிதம், சுதந்திரம் போன்றவற்றில் உங்களுக்கு இருக்கும் அக்க றையை வெளிக்காட்ட மஞ்சள் ரோஜா பொருத்த மானது.

* பவள நிற ரோஜா உங்கள் விருப்பங்களை உங்களால் விரும்பப்படுகிறவர்களுக்கு உணர்த்த ஏற்றது.

* இளஞ்சிவப்பும், வெண்மையும் கலந்த `பீச்' நிற ரோஜா தன்னடக்கத்தை காட்டும்.

* ஆரஞ்சு நிற ரோஜாவை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் வழங்கலாம். கவர்ச்சியாய் தோன்ற விரும்புபவர்களும் இந்நிற ரோஜாவை சூடிக் கொள்ளலாம்.

* சிவப்பு மற்றும் மஞ்சள் ரோஜாக்களை பாராட்டுத் தெரிவிக்க வழங்கலாம்.

* மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ரோஜாக்களை இணைத்து கொடுப்பது எண்ணங்களை ஈர்த்து மனதை உருக வைக்கும்.

* எளிய காதல் தூதுவன் ரோஜாப் பூக்கள்தான். ஒற்றை ரோஜா உறுதியான காதலைச் சொல்லும். இரட்டை ரோஜா அல்லது இரட்டை நிறம் கலந்த ரோஜா, என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று கேட்கும் பொருளில் கொடுப்ப தாகும். இனிய அழைப்புகளுக்கும் இரட்டை ரோஜா வழங்கலாம்.

* வெளிர்நிற ரோஜாக்கள் எல்லாம் நட்பை வெளிப்படுத்துவன. 12 ரோஜாக்கள் சேர்ந்த மலர்ச்செண்டு (பொக்கே) நன்றி தெரிவிக்கவும், 25 ரோஜாக்களின் இணைப்பு வாழ்த்துச் சொல்ல வும், 50 ரோஜாக்கள் சேர்ந்தது நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தவும் ஏற்றது.

* மலர்ந்திருக்கும் நேரங்களில் மனிதர்களை மகிழச் செய்யும் பண்பு மலர்களுக்கே உரியது. அன்பையும், காதலையும் இதமாகச் சொல்லும் ரோஜாக்களை உங்கள் இதயம் கவர்ந்தவர்களுக்கு கொடுங்கள்!


ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

காதல் ஜோடியை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்

நீங்கள் மணமாகாத இளம் பெண் என்றால் உங்களை பல இளைஞர்கள் காதலிக்க கூடும். காதல் என்பது திருமணம் என்ற புனிதமான ஒரு நிலையை நோக்கி உங்களை கொண்டு செலுத்தும் ஒரு சக்தி, அதனால் காதல் விஷயத்தில் எச்சரிக்கை மனப்பான்மை வேண்டும்.

உங்களை காதலிப்பதாகக் கூறும் இளைஞன் உங்கள் அழகை மட்டுமே வர்ணிப்பவனாக இருந்தால் அவனை நம்பாதீர்கள். ஏனென்றால் உங்கள் அழகு எந்தச் சமயத்திலும் பின்னாளில் குறையக்கூடும். திருமணமான பிறகு அழகு குறைந்தபோது உங்களிடம் கவர்ச்சியை எதிர்பார்த்த இளைஞன் ஏமாற்றமுற்று தடம் மாறக்கூடும்.

அழகாக கவர்ச்சியாக இருக்கிறான் என்பதற்காக எந்த ஓர் இளைஞனையும் பெண்கள் காதலிக்கக் கூடாது. அழகு என்பது இனிப்பு பலகாரங்களுக்கு போடப்படும் வண்ணம் போன்றது. வண்ணம்தான் பண்டத்திற்குக் கவர்ச்சியை கொடுக்கக்கூடும். ஆனால் வண்ணம் இல்லாததினாலேயே தின்பண்டத்தின் சுவை கெட்டுவிடப் போவதில்லை.தின்பண்டத்தில் கலந்துள்ள இனிப்பு போன்றது ஓர் இளைஞனின் குண நலன்கள். இனிப்பு இல்லாவிட்டால் தின்பண்டமே இல்லை என்பது போல, வாழ்க்கைக்கு எழில் சேர்ப்பது கணவராக வருபவரின் குணநலன்தான்.

ஆகவே தங்கள் காதல் ஜோடியை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்